ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, முதல் நாளே 19 விக்கெட்டுகள் விழுந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரண்டாவது நாளில் மேலும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், இந்த டெஸ்ட் போட்டி இன்று அல்லது நாளைக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு ஆஸ்திரேலிய அணி களமிறங்கி, 132 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார் என்றால், இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. இதே வேகத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தால், இன்று அல்லது நாளைக்குள் இந்த போட்டி முடிவடைந்துவிடும் என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.