Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த பீகார் வாலிபர்கள்.. திருப்பூரில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (12:37 IST)
திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவுத் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். 
 
அப்போது, பிகார் மாநிலத்தை சேர்ந்த 30 வயது ஜாகிர் அன்வர் மற்றும் 25 வயது ரவி ராஜா  ஆகிய இருவர், அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.
 
விற்பனை செய்வதற்காகவே இவர்கள் துப்பாக்கிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. தற்போது இருவரிடமும் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 
 
இவர்கள் இதற்கு முன் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்சி வரும் நிலையில் இன்று நாட்டு துப்பாக்கி களுடன் இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

நாளை தவெக மாநாடு எதிரொலி: மதுரையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கு: அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது..!

தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments