Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மெடிக்கல் ரிப்போர்ட்.. மார்பில் காயம் என அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
கொல்கத்தா

Siva

, ஞாயிறு, 29 ஜூன் 2025 (07:43 IST)
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், அதே கல்லூரியில் படித்த வழக்கறிஞர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
அதுமட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் பாதிக்கப்பட்ட மாணவியை காவலாளியின் அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 54 வயதுடையவ காவலாளியும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், அந்த மாணவியின் கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது, கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் இன்னும் சில உண்மைகள் வெளிவரும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!