டெல்லியில் 10 வயது சிறுவன் ஒருவன், மழையில் விளையாட வெளியே செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், தனது தந்தையால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான். இந்தக் கொடூச் சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது.
நேற்று கத்திக்குத்து காயங்களுடன் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, தாதா தேவ் மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரி, மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களால் பாதிக்கப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில், இந்தக் குழந்தையை அவனது தந்தையே குத்தியது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர், 40 வயதான தினக்கூலி தொழிலாளி ஏ. ராய், சாகர்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.
மழையில் விளையாட வெளியே செல்ல வேண்டும் என்று குழந்தை பிடிவாதம் பிடித்தபோது, தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குழந்தை கேட்காததால், தந்தை கோபமடைந்து, சமையலறை கத்தியை எடுத்து, குழந்தையின் இடது விலா எலும்பு பகுதியில் குத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, தந்தை காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றுள்ளார். ஆனால், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
மனைவியை இழந்து தனது நான்கு குழந்தைகளுடன் ஒரு அறையில் வாடகைக்கு வசித்து வந்த தந்தை தற்போது சிறையில் இருப்பதால் அவரது 3 குழந்தைகள் பரிதாபத்தில் உள்ளனர்.