திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவுத் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பிகார் மாநிலத்தை சேர்ந்த 30 வயது ஜாகிர் அன்வர் மற்றும் 25 வயது ரவி ராஜா ஆகிய இருவர், அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.
விற்பனை செய்வதற்காகவே இவர்கள் துப்பாக்கிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இருவரிடமும் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இவர்கள் இதற்கு முன் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம் சாட்சி வரும் நிலையில் இன்று நாட்டு துப்பாக்கி களுடன் இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது