Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூய்மைப் பணியாளர்கள் போராட்ட வழக்கு: வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அரசு மறுப்பு

Advertiesment
Chennai

Siva

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (16:38 IST)
சென்னையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையினர் மற்றும் அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில், சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது, சில வழக்கறிஞர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, வன்முறையை தூண்டியதாக கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் மற்றும் பெண் காவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், அரசுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளும் சேதமடைந்தன. இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
 
வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துக்கள் மட்டுமல்லாமல், தனிநபர்களும், குறிப்பாக பெண் காவலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு என்ன நீதி வழங்குவது? இந்த வழக்குகளை கைவிடுவது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ஆரம்ப சுகாதார நிலையம்: கொளத்தூரில் மக்களின் நலனுக்காக ஒரு புதிய முயற்சி