பேருந்தில் ஒழுகியது மழை நீரா? ஊழலா? – கமல் கலாய் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (08:55 IST)
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அரசின் புதிய பேருந்தில் மழைநீர் ஒழுகியதாக வெளியான செய்தி குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியுள்ளதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு முதல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகம் வரை பல நகரங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு புதிதாக போக்குவரத்திற்கு அளித்த புதிய பேருந்துகளின் உள்ளே மழை நீர் ஒழுகுவதும் பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments