Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

Advertiesment
கனமழை

Siva

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (18:15 IST)
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோரத் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று இரவு தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
 
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!