Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

Advertiesment
கனமழை

Mahendran

, சனி, 22 நவம்பர் 2025 (14:17 IST)
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் நவம்பர் 24-ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
இன்று  கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழை தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.  
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!