வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் இரண்டு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாவது காற்றழுத்த தாழ்வு நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிறகு, நவம்பர் 27 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்து ஆந்திர கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த தொடர்ச்சியான வானிலை மாற்றங்களால், நாளை முதல் அடுத்த ஆறு நாள்களுக்குத் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.