Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

Advertiesment
UPI Fraud

Mahendran

, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (16:16 IST)
கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை வைத்து புதிய பாணியில் மோசடி நடந்துள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த பல மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
 
போலி கும்பல் ஒன்று, பள்ளிக்கல்வி துறையிலிருந்து பேசுவதாக மாணவர்களையும் பெற்றோர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளது. "உங்களுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது. அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு பெற வேண்டுமானால், நாங்கள் அனுப்பும் QR Code-ஐ ஸ்கேன் செய்து, உங்கள் UPI PIN நம்பரை உள்ளிட வேண்டும்" என்று கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
 
UPI மூலம் பணத்தை பெறுவதற்கு எந்த ஒரு PIN எண்ணையும் உள்ளிட தேவையில்லை என்ற அடிப்படை புரிதல் இல்லாததால், பலர் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் PIN நம்பரை கொடுத்துள்ளனர். இதன் விளைவாக, பணத்தை பெறுவதற்குப் பதிலாக, தங்கள் கணக்கிலிருந்து பணத்தை இழந்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது ஒரு வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் என்று தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பல் சரளமாகத் தமிழில் பேசியுள்ளது.
 
UPI பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, பணத்தை பெறுவதற்கு ஒருபோதும் PIN நம்பர் உள்ளிடத் தேவையில்லை. பணம் அனுப்புவதற்கு மட்டுமே PIN நம்பர் தேவைப்படும். இது குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்! மரண இழப்பீடு 2 லட்சமாக உயர்வு! - தமிழக அரசு அரசாணை!