Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Death

Prasanth K

, புதன், 6 ஆகஸ்ட் 2025 (11:28 IST)

கோவையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலைய காவலர்களிடம் காவல் ஆணையர் சரவண சுந்தர் உடனடியாக விசாரணை மேற்கொண்டார்.

 

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அவர் “கோவை கடைவீதி காவல் நிலையத்திற்கு வந்தவர் பெயர் அறிவொளி ராஜன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அவர் காவல் நிலையத்திற்கு வந்தபோது தன்னை சிலர் துரத்துவதாக கூறியுள்ளார். பின்னர் யாரும் கவனிக்காத நேரம் எஸ்.ஐ அறைக்குள் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

இது காவல்நிலையத்தில் நடந்த தற்கொலை. லாக்கப் மரணம் அல்ல. பணியில் இருந்த காவலர்களின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!