Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

Advertiesment
சென்னை

Siva

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (18:21 IST)
சென்னை மும்பை ரயில், நாளை ஒருநாள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள அறிக்கைகள் கூறி இருப்பதாவது: 
 
 மத்திய ரெயில்வே பகுதியில் உள்ள அம்பர்நாத் - பத்லாப்பூர் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் புதிதாக கல்யாண் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மேம்பாலம் ஒன்று அகற்றப்பட இருப்பதால், அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து நாளை (9-ந்தேதி) காலை 6.35 மணிக்கு மும்பை புறப்படும் சி.எஸ்.டி. அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22158) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதாவது, லோனாவாலா, கர்ஜாத், மற்றும் தானே வழியாக திருப்பி விடப்படுகிறது. 
 
இந்த வழித்தடத்தில் இந்த ரெயில் கூடுதலாக பன்வேல் மற்றும் தானே ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!