Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

Advertiesment
சென்னை விமான நிலையம்

Siva

, வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (15:57 IST)
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட பொறியாளர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மகாராஷ்டிராவை சேர்ந்த பாலஜி தாக்கு என்ற 34 வயது பொறியாளரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பாலஜி தாக்கு என்பவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அன்று இரவு, விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இவர் மன உளைச்சல் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. பாலஜியின் தந்தை அளித்த தகவலின்படி, அவருக்கு பணியிடத்தில் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாஜி தாக்குவுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
 
இந்த சம்பவம், பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் மனநல பிரச்சனைகள் எந்த அளவுக்கு ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதை உணர்த்துகிறது. மன உளைச்சல் ஏற்படும்போது, அதற்கான உதவிகளை நாடுவதும், மனநல ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவதும் மிகவும் அவசியம். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கான வழிகளை அறிந்துகொள்வதன் மூலம், இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைத் தவிர்க்க முடியும்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!