Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவில் நாய்களுக்கு உணவு அளித்த பெண்.. கைது செய்வேன் என மிரட்டினாரா காவலர்?

Advertiesment
Chennai

Siva

, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:39 IST)
சென்னையில், நள்ளிரவில் நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், "நள்ளிரவு 12 மணிக்கு மேல் இப்படி சுற்றித் திரிந்தால் தொல்லைகள் ஏற்படும்" என்று ஒரு காவலர் கூறிய கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
காவலர் கார்த்திக் என்பவர், நாய்களுக்கு உணவு அளிப்பதை எதிர்த்ததோடு, "நான்கு நாட்களுக்கு நாய்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம், அப்போது அவை தானாகவே வருவதை நிறுத்திவிடும்" என்று அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் பரஸ்பரம் வீடியோ பதிவு செய்ய தொடங்கினர். அப்போது, அந்த பெண் காவல்துறையினரின் நடத்தையை கேள்வி கேட்கும்போது, காவலர் கார்த்திக் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
 
இந்தக் கருத்து, பாதிக்கப்பட்டவரை குற்றம்சாட்டுவதாக உள்ளதால், பல தரப்பினரிடமிருந்து கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. இது குறித்து விளக்கமளித்த காவலர்  கார்த்திக், தான் "தொல்லை" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, மாறாக "கைது" என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தியதாக கூறினார். விசாரணை அதிகாரிகளிடம், "நள்ளிரவுக்கு பிறகு வெளியே வருவதை தவிர்க்குமாறு பெண்ணுக்கு அறிவுரை மட்டுமே வழங்கினேன், அவ்வாறு வராவிட்டால் கைது செய்ய நேரிடலாம் என்று எச்சரித்தேன்" என்றும் அவர் விளக்கமளித்தார். 
 
தற்போது, காவலர் கார்த்திக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை போலீஸார் சுமூகமாக முடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் 50% வரி.. பதிலடியாக இன்று முதல் 100 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி தொடக்கம்..! பிரதமர் மோடி அதிரடி..!