Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புதமான மருத்துவ குணம் கொண்ட பவளமல்லி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

Advertiesment
மருத்துவ குணங்கள்
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள பொருட்கள் மர்றும் மூலிகைகளை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத நம்முடைய முன்னோரின் மருத்துவத்தை பின்பர்றி வாழ்ந்தால் நோயற்றவாழ்வை நாம் வாழலாம்.

உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசரப்பான  இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை  கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
 
காய்ச்சலை தணிக்க: தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பனங்கற்கண்டு, இஞ்சி. பவளமல்லி இலைகள் 5 எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும்.  இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால்  சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும்.
 
சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய்  நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
 
பவளமல்லி தேநீர் தயாரிக்க: பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் எண்ணிக்கை: கொரோனாவால் இந்தியர்கள் பீதி!!