Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸில் ராஜினாமா படலம்: ஆட்சியை தக்க வைக்க திண்டாட்டம்?

காங்கிரஸில் ராஜினாமா படலம்: ஆட்சியை தக்க வைக்க திண்டாட்டம்?
, செவ்வாய், 2 ஜூலை 2019 (12:43 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதால், அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். 
 
விஜயாநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளனர். 2 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 77 ஆக குறைந்துள்ளது. 
 
இது ஆட்சிக்கு கடும் நெருக்கடி தரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சித்தராமையா இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக வின் அடுத்த விக்கெட் காலி – அதிமுகவில் இணையும் முக்கிய நிர்வாகி !