ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

Mahendran
வெள்ளி, 14 நவம்பர் 2025 (16:53 IST)
பிகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளன. அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் மேற்கொண்ட தீவிர பிரசாரம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
 
'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பிகாரில் சசராம் முதல் பாட்னா வரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, 110 தொகுதிகளில் 'வாக்காளர் அதிகார யாத்திரை' நடத்தினார். ஆனால், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவர் பிரசாரம் செய்த இந்த 110 தொகுதிகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை.
 
மாலை 4 மணி நிலவரப்படி, 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது, ராகுல் காந்தியின் பிரசாரம் பிகார் வாக்காளர்களை சென்றடையவில்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments