ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

Siva
வெள்ளி, 21 நவம்பர் 2025 (15:43 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த தனது ஜன சூராஜ் கட்சியின் நிதி மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்த, பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார்.
 
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது வருமானத்தில் 90 சதவீதத்தையும், ஒரேயொரு ஒரு வீட்டை தவிர மற்ற அனைத்து சொத்துக்களையும் கட்சிக்கு நன்கொடையாக வழங்க போவதாக அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
தோல்விக்கு பிறகு கட்சியை மீட்டெடுக்க, 'பீகார் நவ்நிர்மாண் சங்கல்ப் அபியான்' என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார். இதன் கீழ், கட்சி வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 1,18,000 வார்டுகளுக்கும் சென்று, மக்களுடன் நேரடியாக பேசி, அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும்.
 
சமீபத்திய தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாததால், தனது முடிவு ஒரு "தவறு" என்று பிரசாந்த் கிஷோர் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் மேற்கு சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மௌன விரதத்தையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments