நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (15:40 IST)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் ஜனவரி 9, 2026 அன்று கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடைபெறவுள்ள 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இந்த மாநாடு, "நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்கள் மற்றும் மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கு பாடம் புகட்டும்" வகையில் அமையும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கட்சி நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், இதன் வெற்றியை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
 
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களையும், தொண்டர்களையும் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments