Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

Advertiesment
கங்குலி

vinoth

, புதன், 25 ஜூன் 2025 (10:34 IST)
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

அவர் கேப்டனான பிறகு இந்திய அணியின் அனுகுமுறையே மாறியது. இந்திய அணிக்குள் ஆக்ரோஷத்தைப் புகுத்தியவர் என்ற பெருமை கங்குலியையே சாரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிசிசிஐ தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

சமீபகாலமாக இந்திய சினிமாவில் விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் சச்சின் மற்றும் தோனி ஆகியோரை அடுத்து கங்குலி பயோபிக் படமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கவுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கிறேன். அது மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் எனக்கு மிகவும் பதற்றமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!