Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துர்கா பூஜையில் மருமகள் நடனமாடுவதை எதிர்த்த மாமனார்.. குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட கொடூரம்..!

Advertiesment
மத்தியபிரதேசம்

Siva

, வியாழன், 2 அக்டோபர் 2025 (08:14 IST)
மத்திய பிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் தனது மருமகள் நடனமாட திட்டமிட்டதை எதிர்த்த மாமனார், அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
மத்திய பிரதேசத்தில் உள்ள மவுகஞ்ச் மாவட்டத்தில் 62 வயதான ராம்ரதி விஸ்வகர்மா என்பவர் அவரது மனைவி, மகன் மற்றும் பேரனால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். விசாரணையில் ராம்ரதியின் மருமகள் துர்கா பூஜை பந்தலில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  திட்டமிட்டிருந்தார். இதற்கு ராம்ரதி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த எதிர்ப்பு குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 
கோபமடைந்த அவரது பேரன் சோனு, ராம்ரதியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். அதன் பிறகு, அவரது மகன் வேத்பிரகாஷ் மற்றும் ராம்ரதியின் மனைவி ஆகியோரும் சேர்ந்து அவரை மர கம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில், 62 வயதான ராம்ரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 62 வயது முதியவரை அவரது குடும்ப உறுப்பினர்களே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாற்றில் புதிய உச்சம்: $500 பில்லியன் சொத்து மதிப்பை பெற்ற உலகின் முதல் நபர் எலான் மஸ்க்..!