Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்த டாக்டர்.. இறுதிச்சடங்கின்போது திடீரென எழுந்ததால் பரபரப்பு..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (07:56 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில்  64 வயது நோயாளி அபிமான் கிர்தர் டயடேவை, ஆட்டோரிக்ஷாவிலேயே பரிசோதித்த டாக்டர் பிரபு அஹுஜா, 'இறந்துவிட்டார்' என அறிவித்து இறப்பு சான்றிதழையும் வழங்கினார். ஆனால், இறுதிச் சடங்கிற்கு தயாராகும்போது, டயடே மூச்சு விடுவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
 
உடனே அவர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து,  மாநகராட்சி சுகாதாரத் துறை மருத்துவமனைக்கும் டாக்டர் அஹுஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
 
டாக்டர் அஹுஜா, "நுரை தள்ளியதையும், மூச்சு சத்தம் இல்லாததையும் கண்டேன். வென்டிலேட்டர் தேவை என சொன்னேன். குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழ் கேட்டபோது, அவர் உயிருடன் இருக்கிறார் என்பது தெரியாமல் கொடுத்தேன்" என விளக்கமளித்தார். ஆனால், முறையான பரிசோதனை இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து அவரால் விளக்க முடியவில்லை.
 
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து நடந்த இடத்தில் குவிந்து கிடந்த நகைகள், பணம்.. மீட்பு பணியாளரின் நெகிழ்ச்சியான பதிவு..!

பள்ளி சிறுமிகளை ஆடையை கழட்ட சொல்லி ஆபாச புகைப்படம்.. உசிலம்பட்டியில் இருவர் கைது..!

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments