காங்கிரஸ் கட்சிக்கும், சசி தரூருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கேரள காங்கிரஸ் கட்சி சசி தரூரை ஓரங்கட்ட தொடங்கியுள்ளது. கட்சியின் நிகழ்வுகளுக்கு அவரை அழைக்க போவதில்லை என்றும், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது புறக்கணிக்கப்படுவார் என்றும் கேரள மாநில காங்கிரஸ் யூனிட் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆற்றல், துணிச்சல் மற்றும் உலகளாவிய ஈடுபாடு' ஆகியவற்றை பாராட்டிய சசி தரூரின் கருத்துக்களும், வெளியுறவுக் கொள்கை குறித்த அவரது சுதந்திரமான நிலைப்பாடுகளுமே இந்த மோதலுக்கு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.
சசி தரூர் மீது தாங்கள் 'நம்பிக்கையை இழந்துவிட்டதாக' கேரள காங்கிரஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. மேலும், கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மோதல், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சசி தரூரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே தான் கேரளாவின் கேரளா காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று வெளியான சர்வேயை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதன் பிறகு தான் அவர் மீதான கேரளா காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது