Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...

திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து  : கிராம மக்களின் விநோத சடங்கு...
, வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:34 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த மாதம், தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில்,இன்று அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஊரில் மழை இல்லைஎன்றால் கழுதை, தவளைகளுக்கு திருமணம் செய்துவந்தால், மழை பொத்துக்கொண்டு பெய்யும் என்று மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அதனால், பெரும்பாலான மக்கள் இந்த சடங்குகளை குறிப்பிட்ட இடங்களில் செய்துவருகிறார்.
 
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த ஜூலை மாதம் 19 ஆம்தேதி, , தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, ஆண் - பெண் ஆகிய இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 
 
எனவே, அவர்களின் சடங்கின் படி, தங்கள் கிராமத்தில், கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு,   அதிகமாக மழை பெய்துவருவதால்,  இந்த மழையை நிறுத்தும் பொருட்டு, இரு தவளைகளுக்கு இன்று விவாகரத்து செய்துவைத்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2- வயது குழந்தையின் விளையாட்டால் தாய் பலி ! அதிர்ச்சி சம்பவம்