மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (17:03 IST)
'வாக்குத் திருட்டு' குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் ஊர்மி என்பவர், அழியாத மை வைக்கப்பட்ட தனது விரலுடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அவர், "மோடி-பைடு இந்தியாவுக்காக வாக்களித்தேன். போய் சென்று ஓட்டு போடுங்கள், பீகார்" என்று பதிவிட்டிருந்ததால், ஒருவர் இரு மாநிலங்களில் வாக்களித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது. 
 
காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் இதை ஒரு 'போலி மக்கள் ஆணை' என்றும், பாஜகவின் 'வாக்குத் திருட்டு ஸ்டார்ட் அப்' என்றும் விமர்சித்தனர். அரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றதாக எழுந்த முந்தைய குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த, காங்கிரஸார் இந்த காட்சியைப் பயன்படுத்தினர்.
 
சர்ச்சை அதிகமானதால், வழக்கறிஞர் ஊர்மி, தனது பதிவு பீகார் வாக்காளர்களை ஊக்குவிக்க மட்டுமே என்றும், தான் மகாராஷ்டிராவில்தான் வாக்களித்ததாகவும் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் பீகார் தேர்தல் நேரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments