Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

65,000 மெட்ரிக் டன்.. செனாப் பாலம் கட்டியது முழுக்க முழுக்க அதானி சிமெண்ட்டா?

Advertiesment
செனாப் பாலம்

Siva

, வியாழன், 12 ஜூன் 2025 (09:17 IST)
அதானி குழுமத்தின் முக்கிய பகுதிகளான அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி.யை உள்ளடக்கிய அதானி சிமென்ட், இந்திய ரயில்வேயின் பெருமைமிகு கனவு திட்டமான செனாப் பாலத்தின் கட்டுமானத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆம், இந்தப் பிரம்மாண்ட பாலத்திற்கு தேவையான மொத்த சிமென்டில் 65,000 மெட்ரிக் டன் சிமென்டை அதானி சிமென்ட் தான் வழங்கியுள்ளது.  
 
செனாப் பாலம் கட்ட ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமென்ட் (OPC) 43 தரம் கொண்ட சிமெண்ட் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த சிமென்ட் அதிக வலிமை, நீண்ட காலம் உழைக்கும் தன்மை மற்றும் நிலையான தரத்திற்கு பெயர் பெற்றது என்று அதானி சிமென்ட் நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
 
அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி வினோத் பஹேட்டி இந்தத் திட்டம் குறித்துப் பேசும்போது, "பொறியியல் சாதனைகளின் எல்லைகளை மாற்றி எழுதுவது மட்டுமல்லாமல், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பங்களிக்கும் ஒரு திட்டத்தில் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. 
 
அதானி சிமென்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மூட்டை சிமென்டும் தேசத்தின் முன்னேற்றத்தின் எடையை சுமக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று கூறினார். "
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனிலவு தொடங்கி படுகொலை வரை..! கச்சிதமாக திட்டம்போட்ட மனைவி! - ஹனிமூன் கொலையின் முழு கதை!