பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 115 புள்ளிகள் உயர்ந்து 85 ஆயிரத்து 296 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 26 ஆயிரத்து 89 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்பலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், இன்டிகோ, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் நிலை உயர்ந்துள்ளது.
அதேபோல் ஆசியன் பெயிண்ட், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.