Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது..!

தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது..!
, வெள்ளி, 24 ஜூலை 2020 (11:32 IST)
சென்னையில் தங்கத்தின் விலை ரூ.39,032க்கு விற்பனை ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.   
 
நேற்று இதுவரை இல்லாத வகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776க்கு விற்பனை ஆனது. 
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4879 ஆக உயர்வு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி இ-மெயில் விவகாரம்; யூட்யூபர் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு!