Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முதலாக 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையிலும் அதிகரிப்பதால் பரபரப்பு

முதல்முதலாக 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையிலும் அதிகரிப்பதால் பரபரப்பு
, வியாழன், 23 ஜூலை 2020 (18:16 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6472 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 6000க்கும் அதிகம் என்ற புதிய உச்சம் பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6472 பேர்களில் 1336 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,900 
ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையிலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3232 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5210 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 60,375 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,57,869 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Vodafone –நிறுவனத்துக்கு கிடைக்கும் ரூ 800 கோடி