மயிலாப்பூரில் ஸ்ரீ சத்ய சாயி பகவானின் 'ப்ரேம ரத பவனி' உலா! சென்னை, மயிலாப்பூர்:

Mahendran
செவ்வாய், 18 நவம்பர் 2025 (17:39 IST)
ஸ்ரீ சத்ய சாயி பகவானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், நவம்பர் 16 அன்று நாடு முழுவதும் 'ரதோஸ்வ நாளாக' கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில்அன்புத் தேர் பவனி மிக உற்சாகமாக நடைபெற்றது.
 
மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த அலங்காரத் தேர் வீதிகளில் உலா வந்தது.
 
ரத ஊர்வலத்தின்போது, சாயி பகவானின் திவ்ய திருவுருவம் பக்தர்களுக்கு காட்சியளிக்க, பஜனை பாடல்கள், வேத கோஷங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்கின. 
 
மாலை 4.15 மணிக்குத் தொடங்கிய இந்த 'ப்ரேம ரதம்', பக்தர்கள் கோஷமிட, இரவு 7.10 மணிக்கு சுந்தரம் மந்திரை வந்தடைந்தது.
 
இந்த ரத பவனியில் ஆயிரக்கணக்கான சாயி பக்தர்கள் திரண்டு, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நவம்பர் 23 அன்று சாயி பகவானின் பிறந்தநாளுடன் நூற்றாண்டு விழா நிறைவடைகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments