விபூதியால் தோன்றிய கோரக்கச் சித்தர்: காயகல்பச் செடி உருவான கதை

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (18:32 IST)
குப்பை மேட்டில் கிடந்த விபூதியின் மகிமையால் ஒன்பது வயது சிறுவனாக தோன்றியவரே கோரக்க சித்தர் ஆவார். மூலிகை சக்தியால் பிறந்த இவர், தன்னை குப்பை தொட்டியில் வீசிய தாயை விட்டு, ஒரு சித்தருடன் சென்றார்.
 
படைக்கும் தொழிலின் வித்தையைக் கற்க வேண்டி, கோரக்கர் பிரம்ம முனியுடன் இணைந்து யாகம் செய்தார். இதை தடுக்க, தேவர்கள் அனுப்பிய நெருப்பு மற்றும் நீர் ஆகியவை இரண்டு பெண்களாக மாறி யாகத்தை அழிக்க முயன்றன.
 
கோபமடைந்த முனிவர்கள், அந்த பெண்களின் மீது நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றினர். இந்த செடிகளே காயகல்ப செடிகள் என அழைக்கப்படுகின்றன.
 
யாகம் தடைபட்டாலும், சிவபெருமானின் கட்டளைப்படி, கோரக்கர் உள்ளிட்ட சித்தர்கள் காயகல்பத்தை கொண்டு உலக உயிர்களுக்கான நோய்தீர்க்கும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கினர்.
 
இவர் சதுரகிரிக்கு சென்று வந்ததாகவும், பல சித்து வேலைகள் செய்து மக்களுக்கு உதவிய கோரக்கர், இறுதியாக பேரூர் திருத்தலத்தில் சித்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இவர் எழுதிய நூல்களில் கோரக்கர் சந்திர ரேகை மற்றும் ரச மணிமேகலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments