Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபூதியால் தோன்றிய கோரக்கச் சித்தர்: காயகல்பச் செடி உருவான கதை

Advertiesment
Korakkar

Mahendran

, திங்கள், 17 நவம்பர் 2025 (18:32 IST)
குப்பை மேட்டில் கிடந்த விபூதியின் மகிமையால் ஒன்பது வயது சிறுவனாக தோன்றியவரே கோரக்க சித்தர் ஆவார். மூலிகை சக்தியால் பிறந்த இவர், தன்னை குப்பை தொட்டியில் வீசிய தாயை விட்டு, ஒரு சித்தருடன் சென்றார்.
 
படைக்கும் தொழிலின் வித்தையைக் கற்க வேண்டி, கோரக்கர் பிரம்ம முனியுடன் இணைந்து யாகம் செய்தார். இதை தடுக்க, தேவர்கள் அனுப்பிய நெருப்பு மற்றும் நீர் ஆகியவை இரண்டு பெண்களாக மாறி யாகத்தை அழிக்க முயன்றன.
 
கோபமடைந்த முனிவர்கள், அந்த பெண்களின் மீது நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றினர். இந்த செடிகளே காயகல்ப செடிகள் என அழைக்கப்படுகின்றன.
 
யாகம் தடைபட்டாலும், சிவபெருமானின் கட்டளைப்படி, கோரக்கர் உள்ளிட்ட சித்தர்கள் காயகல்பத்தை கொண்டு உலக உயிர்களுக்கான நோய்தீர்க்கும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கினர்.
 
இவர் சதுரகிரிக்கு சென்று வந்ததாகவும், பல சித்து வேலைகள் செய்து மக்களுக்கு உதவிய கோரக்கர், இறுதியாக பேரூர் திருத்தலத்தில் சித்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இவர் எழுதிய நூல்களில் கோரக்கர் சந்திர ரேகை மற்றும் ரச மணிமேகலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருக்கார்த்திகை: பரணி தீபம் ஏற்றி முருகனை வழிபடும் மகத்துவம்!