Publish Date: Sat, 10 Dec 2022 (08:40 IST)
Updated Date: Sat, 10 Dec 2022 (08:42 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்க உள்ளது.
இந்திய அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு ஒருநாள் போட்டிகளை தோற்று இந்திய அணி பரிதாபகரமாக தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சிலர் விளையாடவில்லை. அதனால் அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்கி, வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.