நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்த போதும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பில் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் கே எல் ராகுல் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார்.
இந்த தொடருக்காக லக்னோ அணியால் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதத்தைத் தவிர மிக மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.