கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிப்பதே இந்த பிரச்சனையால்தான்… ஸ்ரீகாந்த் கருத்து!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (07:14 IST)
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இந்தியக் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தைத் தொடங்கி வைத்தவர் என்று இவரை சொல்லலாம். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவர். இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்.

ஓய்வுக்குப் பிறகு தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ஸ்ரீகாந்த், தன்னுடையக் கருத்துகளை வெளிப்படையாக முன்வைப்பவர். அது சில நேரங்களில் சர்ச்சைகளை உருவாக்கவும் செய்யும்.

இந்நிலையில் இப்போது வீரர்கள் ஓய்வு முடிவு குறித்துப் பேசியுள்ளார். அதில் “ கிரிக்கெட் வீரர்கள் 36-37 வயதில் ஓய்வை அறிவிக்கக் காரணமே அவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு பிரச்சனை. பார்வையில் சிறிய அளவு குறைபாடு இருந்தாலும் பேட்டிங் செய்வது கடினம்.  பல வீரர்களின் ஓய்வுக்குக் காரணம் பார்வை குறைபாடுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments