Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (16:03 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்த தொடர்தான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைக்கு தான் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் ”ரோஹித் ஷர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் வருகிறது. அது மிகவும் கடினமாக இருக்கும். ஸ்விங்குக்கு ஏற்றதாக இந்த ஆடுகளங்கள் இருக்கும். அதை சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments