Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

Advertiesment
மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

vinoth

, திங்கள், 17 மார்ச் 2025 (14:27 IST)
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சச்சின் தலைமையில் விளையாடி வருகிறது. இந்த அணியில் ஓய்வு பெற்ற வீரர்களான யுவ்ராஜ் சிங், அம்பாத்தி ராயுடு, பதான் பிரதர்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாஸ்டர்ஸ் லீக் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் ட்வெய்ன் ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 18 ஓவரில் இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பாத்தி ராயுடு சிறப்பாக ஆடி 74 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியின் போது இந்திய அணியின் யுவ்ராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் டினோ பெஸ்ட் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இருவருமே சர்வதேச அணிக்காக விளையாடும் போது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். தற்போது ஓய்வு பெற்ற பின்னரும் இன்னும் அதே ஆக்ரோஷத்தோடு வார்த்தை மோதலில் ஈடுபட்டது கவனம் பெற்றது. அதன் பின்னர் இருவரையும் சக வீரர்கள் சமாதானப் படுத்தி அழைத்து சென்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!