Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணிக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை தியாகம் செய்யும் கே எல் ராகுல்!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (07:22 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி இக்கட்டான போட்டிகளில் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் கே எல் ராகுல்.

இறுதிப் போட்டியில் கூட அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ராகுல் தற்போது தோனிக்கு அடுத்து இந்திய அணிக்கு சிறந்த பினிஷராக உருவாகியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக தன்னுடையக் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். ஆனால் சூழ்நிலைக் காரணமாக தற்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த அவர் தற்போது அதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களமிறங்க்கவுள்ளாராம். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அவர் தற்போது அணிக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments