Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை… ஜோ ரூட் திட்டவட்டம்!

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை… ஜோ ரூட் திட்டவட்டம்!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:09 IST)
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆஷஸ் தொடரை தன் தலைமையில் மிக மோசமாக இழந்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. 4-1 என்ற கணக்கில் ஆஸியிடம் வீழ்ந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள ஜோ ரூட் ‘அணியை முன்னோக்கி வழிநடத்தி செல்ல சரியான நபர் நான் என நினைக்கிறேன். தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு என்னால் அணியை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை என் கைகளில் இருந்து பிடுங்க நினைத்தால் அப்படியே நடக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஏலத்துக்கு முதல் முறையாக வரும் இங்கிலாந்து வீரர்!