Publish Date: Tue, 18 Jan 2022 (09:32 IST)
Updated Date: Tue, 18 Jan 2022 (09:33 IST)
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் நூற்றுக்கணக்கில் தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 600 பேர்களுக்கும் மேலாக புதிதாக ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றுவரை 8209 பேர்கள் மட்டுமே ஒமிக்ரான் வைரசால் பாதிப்படைந்துள்ள நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 8891 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இதனை அடுத்து இந்தியாவில் தற்போது மைக்ரான் பாதிப்பு 8891 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசிகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது