Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

Advertiesment
ஐசிசி

vinoth

, சனி, 14 ஜூன் 2025 (14:01 IST)
சமீபகாலமாகக் கிரிக்கெட் போட்டிகளில் எல்லைக்கோட்டு சாகசக் கேட்ச்கள் அதிகம் கவனம் பெற்று வருகின்றன. எல்லைக் கோட்டருகே நிற்கும் ஃபீல்டர் வரும் பந்தை பிடித்துவிட்டு தான் எல்லைக் கோட்டை தாண்டி சென்றுவிடுவோமோ என எச்சரிக்கையாக பந்தை வெளியே தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து அந்த பந்தை பிடித்து கேட்ச் ஆக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இப்படி பிடிக்கப்பட்ட பல கேட்ச்கள் போட்டிகளின் முடிவையே மாற்றும் அளவுக்கு சென்றுள்ளன. இப்படிக் கேட்ச்கள் பிடிக்கப்படுவது ரசிகர்களுக்கும் மயிர்க் கூச்செறியும் உணர்வைக் கொடுக்கிறது. ஆனால் இந்த கேட்ச்களுக்கு இப்போது ஐசிசி சிலக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ஒருமுறை மட்டுமே பந்தை வெளியேத் தூக்கியெறிந்து ஃபீல்டர் எல்லைக்கோட்டைத் தாண்டி சென்று மீண்டும் மைதானத்துக்கு வந்து கேட்ச் பிடிக்கவேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு முறை பந்தை தூக்கியெறிந்து மைதானத்தின் உள்ளே வந்தால் அது சிக்ஸராகவேக் கருதப்படும்.

அதே போல ஒரு வீரர் பந்தை மைதானத்தினுள் தூக்கியெறிந்து எல்லைக் கோட்டைத்  தாண்டி செல்லும்போது, அதை மைதானத்தில் நிற்கும் மற்றொரு வீரர் கேட்ச் பிடித்து அவுட்டாக்குவதற்கும் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பந்தை தூக்கியெறிந்த வீரர் சக வீரர் அதைக் கேட்ச் பிடிக்கும்போது மைதானத்துக்குள் திரும்ப வந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்றால் அதுவும் சிக்ஸராகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வரவுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!