Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

Advertiesment
இந்தியா

vinoth

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (08:18 IST)
இருநாட்டு அரசியல் பிரச்சனைகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இருநாட்டுத் தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. அதனால் இப்போதிருக்கும் இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தான் மைதானங்களில் விளையாடியதே இல்லை.

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் இரு அணிகளையும் ஒரு க்ரூப்பில் வைத்துப் போட்டிகளை நடத்தி வருகிறது ஐசிசி. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டியை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காணவே உலகளவில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் வாரியம், இனிமேல் ஐசிசி தொடர்களில் இந்திய அணியைப் பாகிஸ்தான் அணி இருக்கும் க்ரூப்பில் இடம்பெறச் செய்ய வேண்டாம் என ஐசிசிக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பிசிசிஐ-யின் இந்த முடிவும் இருக்காலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!