உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களும் எடுத்திருந்தது.
இதனை அடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், வெற்றி பெற 282 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா அணியின் எய்டன் மார்க்ரம் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவருக்குத் துணையாக, கேப்டன் டெம்பா பவுமா 65 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி தற்போது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவை. இன்றும் நாளையும் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.