Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

Advertiesment
நடிகர் கிருஷ்ணா

Mahendran

, செவ்வாய், 24 ஜூன் 2025 (12:15 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு தமிழ்த் திரைப்பட ஹீரோவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு சம்மன் அனுப்பக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் ஸ்ரீகாந்த் சட்டவிரோதமாக போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் உள்ள படப்பிடிப்புக்கு சென்றுள்ளதால், கேரளாவுக்கே சென்று அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!