Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 10 நாளில் ஷூட்டிங் கிளம்பும் சிம்பு படக்குழு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (14:55 IST)
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்க உள்ள நதிகளில் நீராடும் சூரியன் திரைப்படம் இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு செல்வது தாமதமானது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments