Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகைக்கு ஆபாச அர்ச்சனை- சூப்பர் ஸ்டார் நடிகரின் ரசிகர்களுக்கு ஆப்பு!

Advertiesment
நடிகைக்கு ஆபாச அர்ச்சனை- சூப்பர் ஸ்டார் நடிகரின் ரசிகர்களுக்கு ஆப்பு!
, வெள்ளி, 5 ஜூன் 2020 (17:18 IST)
நடிகை மீரா சோப்ராவை ஆபாசமாகப் பேசிய தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா மந்திரி தெரிவித்துள்ளார்.

நடிகை நிலா என தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுவர் மீரா சோப்ரா. இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். சில தினங்களுக்கு சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஜூனியர் என் டி ஆர் பற்றி கேள்வியை எழுப்ப ‘அவரை எனக்கு தெரியாது… நான் அவர் ரசிகை அல்ல’ எனக் கூறினார்.

அதிலிருந்து ஜுனியர் என் டி ஆரின் ரசிகர்கள் அவரது கணக்கை டேக் செய்து ஆபாசமாக பேசி வந்தனர். மேலும் ஒரு சிலர் கொலை செய்துவிடுவதாகவும், பாலியல் வல்லுறவு செய்வதாகவும் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து மீரா சோப்ரா அது சம்மந்தமான ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து தெலங்கானா போலீஸையும், தொழில்துறை அமைச்சர் கே டி ராமாராவையும் டேக் செய்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக கே டி ராமாராவ் ‘இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி தெலங்கானா போலீஸாருக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ஆபாச அர்ச்சனை செய்த ரசிகர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெறிக்கவிடும் லாஸ்லியாவின் "பிரண்ட்ஷிப்" பர்ஸ்ட் லுக்!