நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

Mahendran
திங்கள், 8 டிசம்பர் 2025 (12:30 IST)
கேரளத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்திற்காக எர்ணாகுளம் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். 
 
இந்த வழக்கின் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப், கைது செய்யப்பட்டு 85 நாள்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
சுமார் 8 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இன்று வெளியான தீர்ப்பில், நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளரான பல்சர் சுனில் , மார்டின் ஆண்டனி உள்ளிட்ட மொத்தம் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
இந்த 6 பேருக்குமான தண்டனை விவரங்கள் இன்று மதியம் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கேரளத் திரையுலகிலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்