Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை திசை திருப்பிய 8 சிக்ஸர்கள்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (06:31 IST)
ஆட்டத்தை திசை திருப்பிய 8 சிக்ஸர்கள்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 12 பந்துகளில் அடிக்கப்பட்ட 8 சிக்ஸர்கள் திடீரென ஆட்டத்தை திசை திருப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மிக அபாரமாக விளையாடி 223 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அடித்து விளையாடியது. 10 ஓவர்கள் வரை 10 ரன்ரேட் இருந்ததால் அந்த அணி இலக்கை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இருப்பினும் 17வது ஓவர் முடிவில் அந்த அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது 
 
இந்த நிலையில் அதுவரை தடவி தடவி அடித்துக்கொண்டிருந்த ராகுல் திவேட்டியா திடீரென விஸ்வரூபம் எடுத்து கார்ட்டல் வீசிய 18-வது ஓவரில் 5 சிக்சர்கள் அடித்தார். இதனால் வெற்றிக்கு தேவை 2 ஓவர்களில் 21 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது 
 
அடுத்ததாக முகம்மது ஷமி வீசிய 19வது ஓவரில் ஆர்ச்சர் 2 சிக்சர்களும், திவேட்டியா ஒரு சிக்ஸரும் அடித்ததால் ஆட்டம் தலைகீழாக மாற்றிவிட்டது. 20வது ஓவரில் வெற்றிக்கு தேவை 2 ரன்கள் என்று மட்டுமே இருந்த நிலையில் டாம் கர்ரன் மிக எளிதாக ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments