Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2020, : பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப்- ராகுல் அதிரடி சதம் ...பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்கு !

ஐபிஎல்-2020,  : பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப்- ராகுல் அதிரடி சதம் ...பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்கு !
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (21:31 IST)
ஐபிஎல் 2020 கிரிக்கெட் யாரும் கணிக்க முடியாத  கோணத்தில் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆர்பிசி டாஸ் எவ்ன்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் பின்வருமாறு…

1.கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரி அணியின் வீரர்கள் பின்வருமாறு :1.
தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோர்டான் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதில், ஜேம்ஸ் நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். அவர் 69 பந்துகளில் சதம் அடித்தார். இத்தொடரில் சதம் அடித்த முதல் வீரர் அவர் ஆவார். மய்ங்க் 26 ரன்களும், நிகோல்லஸ் 17 ரன்களும்,  மேக்ஸ்வெல்  5அன்களும் எடுத்தனர்.

 
பெங்களூர் அணியில் சிவம்ன் துபே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  எனவே 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெடுகள் இழப்பிற்கு 207 எடுத்து, பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IPL-2020 டாஸ் வென்ற பெங்களூர் பந்து வீச்சு தேர்வு...பேட்டிங்கில் அதிரடி காட்டுமா பஞ்சாப் சிங்கங்கள் ?